Saturday, December 31, 2005

புத்தாண்டு வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்

தமிழ்வலைப்பதிவர்கள் , வாசகர்கள்(?) அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு அனைவரின் இதயத்திலும் அமைதியையும், சாந்தியையும், சமாதானத்தையும் உண்டாக்க வேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன்.



இந்தப் புத்தாண்டில் நமது ஒவ்வொருவரின் பிராத்தனை

ஆண்டவரே, எங்களை உமது அமைதிக்கான கருவியாக்கு,
எங்கே வெறுப்பு இருக்கின்றதோ அங்கே நாங்கள் அன்பை விதைக்க அருள் செய்
எங்கே காயம் இருக்கின்றதோ அங்கே நாங்கள் மன்னிப்பை வழங்கஅருள் செய்
எங்கே சந்தேகம் இருக்கின்றதோ அங்கே நாங்கள் விசுவாசம் போதிக்க அருள் செய்
எங்கே நம்பிக்கையின்மை இருக்கின்றதோ அங்கே நாங்கள் நம்பிக்கையைப் போதிக்க அருள் செய்
எங்கே இருள் இருக்கின்றதோ அங்கே நாங்கள் வெளிச்சம் உண்டாக்க அருள் செய்
எங்கே துன்பம் இருக்கின்றதோ அங்கே நாங்கள் மகிழ்வை உண்டாக்கஅருள் செய்

ஆண்டவரே, எங்களை உமது அமைதிக்கான கருவியாக்கு.

1 comment:

ஞானவெட்டியான் said...

தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.