Friday, July 01, 2005

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு

ரஜினிப்பாட்டு எழுதி படங்காட்டலங்க, ஜல்லியும் அடிக்கலங்க.

இன்னைலைருந்து (ஜுலை 1 முதல் ஜூலை 10 , 2005) முதல் நெய்வேலியில் எட்டாவது புத்தகக் கண்காட்சி நடைபெறப்போகிறது. அதை முன்னிட்டு இன்றைய இந்துநாளிதளில் வெளியான செய்தகள் பற்றிய சுட்டிகள். http://www.hindu.com/2005/07/01/stories/2005070102530500.htm மற்றும் http://www.hindu.com/2005/07/01/stories/2005070102540500.htm

இவைகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுடன் நான் 100% ஒத்துப் போகின்றேன். எவ்வளவு சத்தியமான உண்மை? என்னைப்பொறுத்த வரையில் நூற்ற்றுக்கு இருநூறு சதவீதம் உண்மை.

நான் புனைவல்லாத (Non-Fiction Documentry Types ) விசயங்களை (மட்டுமே) விரும்பிப் படிப்பவன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்).

1. தொலைக்காட்சி ( நான் சொல்வது நேசனல் ஜீயோகிராபிக், அனிமல் பிளானட் மற்றும் டிஸ்கவரி ) முதலிய ஊடகங்கள் கண்டிப்பாக எனக்கு புதிய தகவல்களையும் புதிய பாதைகளையும் திறக்கின்றன.

2. இண்டர்நெட் முதலியன மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள உதவுகின்றன.

3. ஆனால் கடைசியாக சரணாகதி அடைய விரும்புவது புத்தகங்களிடமே..

எடுத்துக்காட்டாக,

(நான் இயற்கை சம்பந்தப்பட விசயங்களில் அதீத ஆர்வம் உடையவன். பார்க்க பிளாக்கரில் என்னைப்பற்றி)

1. அன்னியனில் கூறப்பட்ட அட்டைகளைப் பற்றிய தகவல்கள் . படம் பார்க்கும் போது அதைப்பற்றி மேலும் அறிய ஆவலூட்டின.

2. இரண்டாவதாக இணையத்தில் தேடியாச்சு, படிச்சாச்சு.. ( விக்கியம்மனும், கூகுலாண்டவருமே எப்போதும் துணை).

3. ஆனால் இவைகளைப்பற்றி இன்னும் அறிய புத்தகங்கள் இருந்தால் ரெம்ப நல்லது.

இணையத்திலே எல்லாம் இருக்கிறது.. பின்பு புத்தகங்கள் எதற்காக என்பதற்கு ,

1. இன்னும் இணையம் , கணிப்பொறி இல்லாதவர்களுக்கு புத்தகங்கள், நூலகங்கள் மட்டுமே துணை.
2. புத்தகங்கள் ரெம்ப அன்யோன்யம்.. அது தரும் நெருக்கத்திற்கு வேறு ஈடு இணை இல்லை.

சிங்கநடை போட்டு சிகரத்தை அடைய, தூண்ட தொலைக்காட்சி மற்றும் சினிமா( நல்ல.. ), இணையம் பயன்படலாம், ஆனால் அதில் வானம் அடைய புத்தகங்களே சரி.. ( அப்பாடா தலைப்புக்கு வந்தாச்சு.. )

கடைசியாக,
இந்த எட்டாவது நெய்வேலி புத்தகக்கண்காட்சியில் சிறந்த பதிப்பகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நம் பத்ரியின் கிழக்குபதிப்பகத்திற்கும், நம் பத்ரிக்கும் தமிழ் மணம் மற்றும் தமிழ்மாலை சார்பாகப் பாரட்டுகள்.


மேலும் சிகரங்கள், வானங்கள் ஏற வாழ்த்துக்கள்.

No comments: