Sunday, July 10, 2005

மைக்ரோசாப்டின் WinCE போட்டியில் டெல்லி மாணவர்கள் 2ம் இடம்

மைக்ரோசாப்ட், மிண்ணணு மற்றும் மின்பொறியாளர் கழகத்துடன் சேர்ந்து WINCE (Windows Embedded ChallengE) என்ற உலகலாவிய அளவிலான போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது யாவருக்கும் தெரிந்ததே. போட்டி விண்டோஸ் CE இயக்குதளம் சார்ந்த கையடக்க கருவிகளுக்காக நடத்தப்பட்டது. உலகெங்கும் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் இறுதிச்சுற்றுக்கு சுமார் 30 பேர் கலந்து கொண்டனர். இந்த 30பேரில் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுக்க மைக்ரோசாப்டின் தலைமையகத்தில் போட்டி நடந்தது.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம், 10 போட்டியாளர்கள் சீனாவிலுமிருந்தும், ஆறு பேர் அமெரிக்காவிடமிருந்தும், ரொமேனியாவிலிருந்து ஐந்தும், இந்தியாவிடமிருந்து மூன்றும் , ஆஸ்திரேலியாவிலிருந்து இரண்டும் , மெக்சிகோ, ஸ்லோவேனியா, துருக்கி மற்றும் பிரேசிலிருந்து தலா ஒன்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சீனா இந்தியாவின் மென்பொருள் சந்தைக்கு ஒரு பெரிய போட்டியாளராக மாறிக்கொண்டிருக்கிறது.

இவர்களில் டெல்லி நேதாஜி சுபாஸ் தொழில்நுட்பக் கல்லூரியைச்சார்ந்த மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றனர். அவர்களின் "விபரநிலையம் (Info Station)" என்ற தொழில்நுட்பத்திற்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது. அவர்களுக்கு சுமார் 6000$ பரிசும் மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்சுடன் பேசும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. 8000$ மதிப்புள்ள முதல் பரிசு ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த மெல்போர்ன் தொழில்நுட்பக் கழகத்திற்குக் கிடைத்துள்ளது.

இதைப்பற்றிய இந்துநாளிதழ்ச் செய்திக்கு : http://www.hindu.com/2005/07/10/stories/2005071001591100.htm

இறுதிப் போட்டியாளர்கள் சமர்ப்பித்த கட்டுரைகளின் PDF வடிவங்களுக்கு: http://www.windowsfordevices.com/news/NS9173943327.html

No comments: