Thursday, January 26, 2006

குடியரசு தின அப்துல் கலாம் உரை

இந்திய குடிமக்களே, உங்கள் அனைவருக்கும் 57-வது குடியரசு தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துக்கள். நமது நிலப்பகுதி, கடல் பகுதி, வான்பகுதிகளை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள், ஆயுதப்படை வீரர்கள், மத்திய மாநிலங்களின் காவல் துறையினருக்கும், உள்நாட்டில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது ராணுவத்தின் இளநிலை அதிகாரிகளுக்கு எனது அரசு, ஓய்வூதிய பலன்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ள இந்த திட்டத்தின் மூலம் 12 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

நாட்டின் அத்தியாவசிய தேவைகள் :

இன்றைய குடியரசு தின உரையில் நமது நாட்டின் மிக முக்கியமான இரண்டு தேவைகள் குறித்து உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவது, தேசிய இயக்கம் மற்றும் அதன் வளர்ச்சி. இரண்டாவது, நமது வளர்ச்சியை பாதுகாப்பது, தனிப்பட்டவர்கள் மற்றும் மக்களின் வருவாய் ஈட்டும் திறனை தொடர்ந்து நிலைநிறுத்துவது ஆகியவையாகும். இதற்காக நமது நீண்டகால பாரம்பரியத்தலிருந்து வரும் நமது வாழ்வின் எல்லைகளை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். நமது வாழ்வின் அனைத்து நடவடிக்கைகளிலும் நீண்டகால வாழ்வியல் முறையை துவக்கி மேலும் வலுப்படுத்துவதற்கு சரியான நேரம் இதுவாகும்.

2020-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்றுவதற்கு நம்முடைய தொலைநோக்கை ஆதார வளமான சக்திவாய்ந்த 54 கோடி இளைஞர்கள் தலைமை ஏற்று நடத்துவதற்கு ஏற்ப பண்பை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தேசிய இயக்கத்தை நோக்கிய வளர்ச்சி இயக்கம் :

நண்பர்களே, நான் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் சென்றிருக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையேயும், பல்வேறு மாநில சட்டசபை உறுப்பினர்களிடையேயும் உரையாற்றியிருக்கிறேன். 10 லட்சம் இளைஞர்களை சந்தித்து நேரடியாக உரையாடியிருக்கிறேன். ஆன்மீகத் தலைவர்கள் பலரையும் நேரடியாக சந்தித்திருக்கிறேன். மேலும் அமைச்சர்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அறிவியல் நிலையங்கள், தொழிற்சாலைகள், சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனங்கள், நீதித்துறை, சட்டத்தை அமலாக்கும் முகமைகள், ராணுவப் படைப் பிரிவுகள், ஊடகங்கள், அரசு சாரா நிறுவங்கள், கலைஞர்கள், கற்பனைத்திறன் படைத்தவர்கள், கிராமப்புற மக்கள், இன்னபிற மக்களிடையேயும் நான் உரையாற்றியிருக்கிறேன். மாற்றுத் திறன் படைத்தவர்களிடையேயும் நான் நேரடியாக உரையாடியிருக்கிறேன். சமுதாயத்தில் முக்கியமானவர்களிடையேயும், அனைத்து நிலையிலுள்ள மக்களுடனான எனது நேர்முக உரையாடல்களில் தேசிய வளர்ச்சியை இலக்காக கொண்டு செயல்படவேண்டியதன் அவசியத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளேன்.

இதன் மூலம் நிறுவனங்களிலும், தனிப்பட்டவர்களிடையேயும் 2020 தொலைநோக்கை இலக்காக கொண்ட இயக்கம் உருவானது. மீண்டும் பல்வேறு பிரிவு மக்களிடையே சென்று நேரடியாக பேசியபோது இந்த தொலைநோக்குக்கான திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதை கண்டேன்.

உதாரணத்திற்கு, ஆந்திரப்பிரதேசம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நதிகளை இணைக்கும் திட்டம் துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பாலாறு, காவேரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளை இணைக்கும் திட்டம் பரிசீýக்கப்பட்டு வருகிறது. கிராமப்பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை அளிக்கும் (புறா) திட்டம், தமிழ்நாட்டில் உள்ள வல்லத்தில் பெரியார் புறா என்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் லோனி புறா என்றும், மத்திய பிரதேசத்தில் சித்திரகூட் புறா என்றும், ஆந்திரப் பிரதேசத்தில் பிமாவரம் பகுதியில் பிராஜ÷ புறா என்றும் பல்வேறு பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருவதை நான் கண்கூடாகக் கண்டுள்ளேன்.

பாரதீய வேளாண் தொழில்கள் நிறுவனம் கிராம மக்கள், பழங்குடியினர் மேம்பாட்டில் புதிய பரிமாணத்தை கொண்டு வந்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் இணையங்களில் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வது, தண்ணீர் சேமிப்பு, பால்வள மேம்பாடு, பழங்களை பாதுகாத்து பதப்படுத்துவது, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் கிராமப்புற மக்கள் அதிகாரம் பெற இந்த நிறுவனம் வழி வகுத்துள்ளது.

தற்போது கேரளா, சட்டீஸ்கர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் புறா இயக்கத்தை தங்களது மாநிலங்களிலும் செயல்படுத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற 93-வது இந்திய அறிவியல் மாநாட்டில் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 20 முதல் 30 கிராமங்களைக் கொண்ட தொகுப்புகளில் 100 புறா திட்டங்களை செயல்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தேன். இதற்கான செயல் திட்டம் வேகமாக நடைபெற்று வருகிறது. அந்தந்த கிராமப் பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு புறா திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர், மிசோரம், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களில் காட்டாமணக்கு செடி பெரிய அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. உயிரி டீசல் எண்ணெய் உற்பத்திக்காக அரசு மற்றும் தனியார் நிலங்களிலும் இவ்வகை செடி பயிரிடப்படுகின்றன.

மேற்கு வங்காளத்தில் சாகர் தீவில் காயல்பாரா கிராமத்தில் 120 கி.வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை, 20 முதல் 30 கி.வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் பிற ஆலைகளுடன் இணைந்து சாகர் தீவில் உள்ள 33 கிராமங்களுக்கு 6 மணி நேரம் மின்சாரத்தை வழங்கி வருகிறது. இது வெகுவிரைவில் மேலும் 150 கிராமங்களுக்கு விரிவாக்கப்பட உள்ளது.

பெங்களூர் நகராட்சி, நகர்ப்பகுதிகளில் உள்ள திடக்கழிவைக் கொண்டு 8 மெகா வாட் மின்சார உற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் உருவாக்கி, இயக்கி, பராமரித்து மாற்றும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது. ஹைதராபாத், விஜயவாடா நகரங்களில் உள்ளதைப் போன்றே இந்த மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்படும்.

150 ஆண்டுகள் பழமைவாய்ந்த மும்பை, சென்னை, கல்கத்தா பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் முதல் செயல்திறன் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்விக்கான செயற்கைகோளை பயன்படுத்தி தொலைவழி கல்வி முறை மூலம் நாடு முழுவதும் உள்ள 15 ஆயிரம் மாணவர்களிடம் இப்பல்கலைக்கழகத்தில் துவக்க விழாவில் உரையாற்றியுள்ளேன். செயல்திறன் பல்கலைக்கழகம் என்பது நாட்டின் எல்லைகள் மற்றும் நிர்வாக எல்லைகளைக் கடந்து சிறந்த கல்வியை அளிப்பதேயாகும். புதிய சூழ்நிலையில் இது நடைபெறும்படி செய்வது நமது பொறுப்பாகும்.

கர்நாடக அரசு, அஸிம் பிரேம்ஜி நிறுவனத்துடன் இணைந்து பள்ளிகளில் கணிணி பயன்படுத்தி கல்வி கற்பிக்கும் திட்டத்தை செயல்படுத்தியது இதன் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது தவிர்க்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள மல்லாபுரம் மாவட்டத்தில் அக்ஷயா கணிணி கல்வி திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு கணிணி கல்வியை அரசு செயல்படுத்தியுள்ளது. பீகார் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள போர் கிராமத்தில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஒருவர் தனது சொந்த கிராமத்தில் கல்வி அறியாமையை முற்றிலுமாக நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஜம்சட்ஜி டாடா கல்வி நிறுவனம் எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கிராம அறிவுசார் மையங்களை உருவாக்கி வருகிறது. கோயம்புத்துசிர், ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு அறிவுசார் மையங்களுடன் கல்வி செயற்கைக்கோள் மூலமாக கிராம அறிவுசார் மையத்தில் உள்ள விவசாயிகள், மீனவர்கள், கைவினைக் கலைஞர்கள் ஆகியவர்களுடன் அவர்களுடைய பிரச்சனைகள் குறித்து நான் உரையாடியுள்ளேன்.

பீமாவரம் அருகே உள்ள பேடா அமீராம் பகுதியில் உள்ள சர்வதேச புற்றுநோய் மருத்துவமனையை நான் பார்வையிட்டேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது. கேரளாவில் உள்ள பருமலாவில் சர்வதேச இதய நோய் மருத்துவ மையம், கிராமப் பகுதிகளில் உள்ள இதய நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை அளித்து வருகிறது. மேலும், ஆந்திரப் பிரதேசத்தில் நல்கொண்டா நகரில் மாற்றுத்திறன் படைத்த ஆயிரம் குழந்தைகளை நான் சந்தித்தேன். இவர்கள் பாதுகாப்புத் துறை தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நடப்பதற்கு உதவும் செயற்கை சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்தும் கிராமப் பகுதிகளில் வளர்ச்சி ஏற்பட்டு வருவதை காட்டுகின்றன. இந்த வளர்ச்சி எதைக் குறிக்கிறது? ஐந்தாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நமது நாகரீகம் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வளர்ச்சியை நோக்கி செல்வதையே காட்டுகிறது. என்னால், வளர்ச்சியடைந்த இந்தியா உருவாகி வருவதைக் காணமுடிகிறது.

இந்த செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சுகாதார பாதுகாப்புத் துறையை சார்ந்த வல்லுநர்கள் சிறப்பான பங்காற்ற வேண்டும்.

அறிவியல் - தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான இயக்கம்:

நமது தேசத்தின் அறிவியலாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் உடனடியாக செயல்படுத்தக் கூடிய ஐந்து உடனடி திட்டங்கள் வைத்துள்ளேன்.

அ) அதிநுண் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூரிய ஒளி மின்சக்தி திறனை 14 சதவீதத்திýருந்து 45 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்,

ஆ) நோய்களை உண்டாக்கும் முறை மற்றும் சிகிச்சைக்கான புதிய முறைகளை மேம்படுத்துவது ஆகியவற்றை கண்டறிவதற்கு புரோட்டியோமிக்ஸில் ஆராய்ச்சி மேற்கொள்வது,

இ) பூகம்பத்தின் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை முன்பே கண்டறிந்து தெரிவிப்பதற்கான முன்னெச்சரிக்கை கருவிகளை கண்டுபிடிப்பது,

ஈ) மேகத்தின் அளவை கொண்டு எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்யக்கூடும் என்பதை கணிப்பதற்கான புதிய ராடார் கருவிகளை அமைப்பது,

உ) அதிநுண் உயிரி மற்றம் தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுகாதார பாதுகாப்பு மின்னணு சாதனங்கள் மற்றும் நாட்டின் தேவைக்கேற்ப கருவிகளை உருவாக்குவது ஆகியவையாகும்.

சுகாதாரப் பாதுகாப்பு:

எச்ஐவி எய்ட்ஸ் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்திற்கு உயர் முன்னுரிமை வழங்க வேண்டும். 2007-ம் ஆண்டுக்கு முன்பாக எச்ஐவி நோய்க்கான சிறந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஊக்கமளிக்க வேண்டும். இத்துறையில் உள்ள தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிறுவனங்கள் ஒருங்கிணைத்து செயல்படவேண்டும். மலேரியா, டைபாய்டு, டயோரியா போன்ற நோய்களை தடுப்பதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ளவேண்டும். 2007-ம் ஆண்டுக்குள் இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவேண்டும். சுகாதார பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருந்து தயாரிப்பவர்கள், பொருளாதார வல்லுநர்கள், சுற்றுச்சூழலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். இதன் மூலம் இந்தியாவில் அனைத்து குடிமக்களும் சுகாதாரத்துடன் வாழ வகை செய்யவேண்டும்.

பாரத் நிர்மாண் திட்டம்:

அடுத்த நான்காண்டுகளில் கிராமப்பகுதிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு பாரத் நிர்மாண் திட்டத்தை துவக்கியுள்ளது, இதற்கு அரசு ரூ.1,74,000 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளது. புறா திட்டத்தைப் போன்று கிராமப் பகுதிகளின் ஒருங்கிணைந்த வேகமான வளர்ச்சிக்கு இது வழி வகுக்கும்.

விழிப்புணர்வும் மாற்றமும் :

2020-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கேற்ற பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. நாடு முழுவதிலும் பலவகைப்பட்ட முகமைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் இதனை உறுதி செய்கின்றன. ஒவ்வொரு மாற்றமும் எழுச்சியும் குறிப்பிட்ட பொறுப்புகளையும் ஒழுங்குமுறையையும் தருகின்றன. எனவே, வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் நல்லெண்ணங்களையும் நன்மதிப்பையும் முன்நிறுத்திய மேம்பாடு நமக்குத் தேவை. நாடு முழுவதிலும் வாழும் கோடிக்கணக்கான முகங்களில் புன்னகை தவழ வேண்டும் என்ற நமது கனவை எதிர்நோக்கி நாம் பயணம் செய்ய வேண்டும். நமது எண்ணங்களில் இதற்கான மாறுதல்கள் தேவை என்பது குறித்து நான் உங்களுடன் பேச விரும்புகிறேன்.

இல்லத்தில் துவங்கும் வெளிப்படையான பழக்கங்கள்:

சென்ற ஆண்டு நவம்பர் 21-ம் தேதியன்று ஆதிசூச்னாகிரி மடத்திற்கு ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக நான் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தில் அனைத்து மதங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் ஏறத்தாழ 54 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிýருந்து கலந்து கொண்டனர். ஷிமோகாவிலுள்ள ஆதிசூச்னாகிரி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் பவானி என்ற மாணவி என்னிடம் கேட்ட கேள்வி இன்னும் நினைவில் இருக்கிறது. அன்பு ஐயா, இன்று நமது நாட்டில் புற்றுநோயைப் போன்று பரவிவரும் ஊழலை தடுப்பதற்கு மாணவர்களாகிய நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்.

நம் நாட்டில் வாழும் இளைய தலைமுறையின் வேதனை இந்த கேள்வியில் தெளிவாக தெரிகிறது. எனக்கு இது மிக முக்கிய கேள்வியாகும். ஏனென்றால் ஒரு சிறுமி இக்கேள்வியை கேட்டிருக்கிறாள். இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையில் நான் ஆழ்ந்திருந்தேன். எனது சிந்தனைக்கு வந்த கருத்துக்கள் சிலவற்றைக் கூற விழைகிறேன்.

இந்த நாட்டில் 100 கோடி மக்கள் வாழ்கின்றனர். சுமார் 20 கோடி குடும்பங்கள் உள்ளன. பொதுவாக அனைவருமே நல்லவர்கள்தான். எனினும் சில லட்சம் பேர் வெளிப்படையான வகையில் வாழாமல், சட்ட திட்டங்களை மதிக்காதிருந்தால் நாம் என்ன செய்யமுடியும்? இந்த குடும்பங்களில் பெற்றோர் தவிர ஒரு மகனோ அல்லது மகளோ அல்லது இருவருமோ உண்டு. பெற்றோர் வெளிப்படையான சரியான பாதையினின்று விலகுவதை பிள்ளைகள் பார்த்தால் அவர்களை அன்பு, பாசம் மூலம் குழந்தைகள் சரியான பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். அந்த விழாவில் குழுமியிருந்த குழந்தைகளைப் பார்த்து உங்களுடைய பெற்றோர் அனைவரும் சரியான பாதையில்தான் நடக்கிறார்களா என்று கேட்டேன். அப்படியே சரியான பாதையில் செல்லாத பெற்றோர்கள் இருந்தால் அவர்களைப் பார்த்து நீங்கள் செல்லும் பாதை சரியில்லை என்று கூறும் தைரியம் உங்களுக்கு உண்டா? இதைத்தான் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிறார்கள். இதற்கு அநேகம் குழந்தைகள் நாங்கள் இதைச் செய்வோம் கூறினார்கள். தாங்கள் அன்பு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி பிறரை நல்வழிப்படுத்தும் நம்பிக்கை பிள்ளைகளுக்கு உள்ளது. இதைப் போல பெற்றோர்களிடையே நடந்த ஒரு கூட்டத்தில் நான் இதே கேள்வியைக் கேட்டேன். முதýல் ஒரு நிசப்தம் நிலவியது. பின்னர் பலர் தாமதமாக தாங்கள் பிள்ளைகளுடைய அன்பான கண்டிப்புக்கு உட்படுவதாக தெரிவித்தனர். பள்ளிக் குழந்தைகள் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். யுநான் உண்மையான தூய்மையான வாழ்க்கையை வாழ்வேன். ஊழலற்ற வெளிப்படையான எனது வாழ்க்கையின் மூலம் பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்குவேன்ரு என்பதே அந்த உறுதிமொழி. இறுதியாக பள்ளி மாணவர்களிடம் இதனை தங்களது குடும்பத்தில் இருந்து ஒரு இயக்கமாக துவக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

மனித வாழ்வின் கண்ணியத்தை கெடுக்கும் வெகுமதிகள்:

1940-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் மும்முரமாகியது. அந்த நேரத்தில் ராமேஸ்வரத்தில் பஞ்சாயத்து வாரிய தேர்தல்கள் நடைபெற்றன. எனது தந்தை பஞ்சாயத்து வாரிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் ராமேஸ்வரம் பஞ்சாயத்து வாரியத்தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். நான் வாழ்ந்த ராமேஸ்வரம் ஓர் அழகிய தீவு. இங்கு சுமார் 20 ஆயிரம் மக்கள் அப்போது வசித்து வந்தனர். எனது தந்தையை அவர்கள் பஞ்சாயத்து வாரிய தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு, அவர் சார்ந்த மதம், சாதி, மொழி அல்லது பொருளாதார நிலை போன்றவை காரணங்கள் அல்ல. அவர் அடிப்படையாக ஒரு நல்ல மனிதர் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பஞ்சாயத்து வாரியத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை நான் கூற விரும்புகின்றேன்.

ராமேஸ்வரம் பஞ்சாயத்துப் பள்ளியில் அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த காலத்தில் மின் விளக்கு வசதி கிடையாது என்பதால் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தேன். சத்தமாக எனது பாடங்களை நான் படித்துக் கொண்டிருந்த நேரம் எனது அறைக் கதவு தட்டப்பட்டது. அப்போதெல்லாம் ராமேஸ்வரத்தில் யாரும் வீட்டுக் கதவை உள் தாழ்ப்பாள் இட மாட்டார்கள். உள்ளே வந்த நபர் எனது தந்தை எங்கே என்று என்னைக் கேட்டார். அவரிடம் எனது தந்தை மாலை தொழுகைக்காக மசூதி சென்றுள்ளதாக கூறினேன். அப்போது அவர் நான் உங்கள் தந்தைக்காக வெகுமதி ஒன்றை கொண்டுவந்துள்ளேன். இதனை நான் இங்கு வைத்துச் செல்லலாமா என்று கேட்டார். எனது தந்தை இல்லாததால் உடனே எனது தாயைக் கூப்பிட்டு அந்த வெகுமதிகளை இங்கு வைத்துக்கொள்ளலாமா என்று அனுமதி கேட்டேன். அவரும் வீட்டில் தொழுகையில் இருந்ததால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. வந்திருந்த நபரை கொண்டுவந்திருந்த பொருட்களை கட்டிýன் மீது வைத்துச் செல்லுமாறு நான் கூறினேன். மீண்டும் எனது படிப்பைத் தொடர்ந்தேன்.

எனது இளைய பருவத்தில் சத்தம் போட்டுப் படிப்பது எனது வழக்கம். நான் சத்தமாக படிப்பதால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியும். இந்த நேரத்தில் எனது தந்தை வீட்டிற்கு வந்தார். அப்போது கட்டிýல் தாம்பூலத் தட்டு இருந்ததைப் பார்த்து இது என்ன? யார் இதைக் கொண்டு வந்தார்? என்று கேட்டார். யாரோ இதை உங்களுக்காக கொண்டு வந்தார் என்றேன். மூடியிருந்த தாம்பூலத் தட்டை திறந்து பார்த்தபோது அதில் விலையுயர்ந்த வேட்டி, அங்கவஸ்திரம், பழங்கள், இனிப்பு வகைகள் ஆகியவற்றுடன் ஒரு துண்டுக் காகிதமும் இருந்தது. எனது வீட்டில் நான் கடைசி மகன். எனது தந்தை என்மீது அதிக அன்பு கொண்டிருந்தார். நானும் அவரை மிகவும் நேசித்தேன். ஆனால் முதல்முறையாக அவர் மிகவும் கோபமடைந்ததை நான் பார்த்தேன். மேலும் எனக்கு ஒரு அடியும் விழுந்தது. நான் பயந்துபோய் அழத் துவங்கினேன். அவர் எனது அருகில் வந்து அன்போடு என் தோளில் கை வைத்து தன்னுடைய அனுமதி இல்லாமல் இதுபோன்ற வெகுமதிகளை வாங்க வேண்டாம் என்று ஆலோசனை கூறினார். இது ஒரு நல்ல பழக்கம் அல்ல. உள்நோக்கத்துடன் பரிசுகளைப் பெறுவதுதான் வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய ஆபத்தான தவறு. புனித நூலான ஹாதித்திýருந்து ஒரு முக்கியமான வாக்கியத்தை எனக்கு நினைவுபடுத்தினார். வெகுமதிகள் உள்நோக்கத்துடன் நமக்குக் கொடுக்கப்படுகின்றன என்பதே அந்த வாக்கியத்தின் பொருள். இப்பாடம் இன்னும் எனது மனதில் நீங்காமல் உள்ளது. எனது வாழ்க்கையில் நல்ல அனுபவத்தைப் பெற இந்த வாக்கியம் உதவியது.

மனுசாஸ்திரத்திலும் இத்தகைய வெகுமதிகள் பெறுவது தவறு என்பது குறித்து எழுதப்பட்டுள்ளது. வெகுமதியை வாங்கிக் கொள்பவர்கள் கொடுத்தவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உடன்பட வேண்டும் என்பதே உள்நோக்கமாகும். சட்டம் அனுமதிக்காத சிலவற்றை நாம் செய்வதற்கு இதுவொரு முக்கிய வாய்ப்பாக அமைகிறது. வெகுமதியை கொடுத்தவருக்கு நாம் எதையாகிலும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த தவறுகள் நிகழுகின்றன. வெகுமதிகளால் நாம் ஈர்க்கப்படக்கூடாது. தனிப்பட்ட நபர்கள் இதனை ஒரு வழக்கமாக ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதனால் வெகுமதிகளை பெற்றுக் கொள்ளும் எண்ணத்திýருந்து நாம் முழுமையாக விடுபடலாம். வெகுமதிகளை ஏற்றுக் கொள்வதால் ஒரு மனிதனுக்குள் இருக்கும் ஆன்மீக ஒளி அணைந்து விடுகிறது. இதனை நான் பகிர்ந்து கொள்வதற்கு முக்கிய காரணம் உண்டு. குறிப்பாக இளைஞர்களின் மனதில் இந்த பழக்கத்தை குறித்த எண்ணங்கள் மாற வேண்டும். இதனை நான் வýயுறுத்த விரும்புகிறேன். தனி மனிதருடைய நன்மதிப்பை பாதிக்கும் இச்செயலை முற்றிலும் கைவிட நாம் முயலுவோம். இப்பழக்கத்தைக் கைவிட ஒவ்வொருவரும் உண்மையாக முயன்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

தாயார் தந்த உண்மை தத்துவம்:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிறந்த துறவியான ஷேக் அப்துல் காதர் அல்-ஜிலானி வாழ்க்கையில் நிகழ்ந்த கதையை, தற்போது நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன். ஒரு நாள் சிறுவன் அப்துல் காதர் மேய்ச்சல் நிலத்தில் நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள்? இந்த நிலம் அதற்கானது அல்ல என்று ஒரு பசு கதறி அழுதுக்கொண்டிருப்பதை கேட்டான். பயந்துபோன சிறுவன் தனது வீட்டுக்குள் ஓடோடினான். வீட்டுக் கூரையின் மேல் ஏறிக்கொண்டான். அங்கிருந்து பார்க்கையில் ஏராளமான மக்கள் அரபி மலைக் குன்றுகளில் இருந்து திரும்பி வந்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் அந்த இடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் அப்பால் இருக்கும் மெக்காவுக்கு ஹஜ் பயணமாக சென்று, திரும்பி வருகிறார்கள். குழப்பமடைந்த அப்துல் காதர் தனது அன்னையிடம் சென்று, அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்காக பாக்தாத் செல்ல அனுமதி கேட்டான். புனித அழைப்பை அந்தத் தாய் புரிந்துகொண்டார். காதர் உடனே பாக்தாத் செல்ல அனுமதித்தார். தனது தந்தையிடமிருந்து அவன் பங்காக பெறப்போகும் நாற்பது தங்க நாணயங்களையும் தாய் அச்சிறுவனிடம் அளித்தார். அவனை வழியனுப்புவதற்காக கதவு அருகே வந்த அந்த தாய், என்னருமை மகனே! நீ போகிறாய்! இறுதித் தீர்ப்பு வரும் நாள் வரை நான் உன்னை பார்க்க போவதில்லை என்றாலும் அல்லாவுக்காக உன்னிடமிருந்து இருந்து என்னை பிரித்துக் கொண்டேன். ஆனால் என்னிடமிருந்து ஒரு அறிவுரையை நீ எடுத்துச் செல்ல வேண்டும். என் மகனே, நீ எப்பொழுதும் உண்மையை உணர வேண்டும், உண்மையே பேச வேண்டும் உனது வாழ்க்கையைப் பணயம் வைக்க நேரிடினும் உண்மையையே பரப்ப வேண்டும் என்று கூறினார்.

அப்துல் காதரும் மற்றவர்களும் சிறிய வண்டிகளில் குழுவாக பாக்தாத்தை நோக்கி பயணித்தானர். வண்டிகள் கடினமான நிலபரப்பை கடந்து செல்லும் போது, குதிரைகளில் திடீரென வந்த கொள்ளையர் கூட்டம் அவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்தது. யாரும் அச்சிறுவனை பொருட்படுத்தவில்லை. கொள்ளையர்களில் ஒருவன் அப்துல் காதரை கவனித்து ஏய் சிறுவனே, பாவம் நீ ! உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டான். அப்துல் காதர், ஆமாம். என் தாயார் 40 பொற்காசுகளை என் சட்டையின் உள்பகுதியில் தைத்து வைத்துள்ளார் என்று பதில் அளித்தான். அதை கேட்ட கொள்ளையன், நகைச்சுவைக்காக காதர் அவ்வாறு சொல்வதாக எண்ணி புன்னகைத்தான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டுச் சென்றான். கொள்ளையர் தலைவன் அங்கு வந்தபோது, இந்த பையனை அவனிடம் கொண்டு சென்றனர். இந்த பையன் சொல்கிறான் இவனிடம் 40 பொற்காசுகள் உள்ளனவாம். பயணிகள் அனைவரையும் கொள்ளையடித்து விட்டோம். ஆனால் இவனைத் தொடக்கூட இல்லை. இவனிடம் பொற்காசுகள் உள்ளதை யாராவது நம்புவார்களா? என்று ஒரு கொள்ளையன் சொன்னான். கொள்ளையர் தலைவன் மீண்டும் அப்துல்காதரை கேட்க, அவன் அதே பதிலை சொன்னான். தலைவன் அவனை அருகில் அழைத்து சட்டையை ஆராய, சிறுவன் சொன்னவாறு பொற்காசுகள் சட்டையின் உள்பகுதியில் தைக்கப்பட்டு இருந்தன.

அதிர்ச்சியுற்ற கொள்ளையர் தலைவன், எதனால் இந்த உண்மையை சொன்னாய்? என்று அப்துல் காதரை வினவ, வாழ்க்கையை இழக்கும் சூழ்நிலை வந்தாலும் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று என் தாய் சத்தியம் வாங்கிக் கொண்டார். 40 பொற்காசுகள்தானே, போகட்டும். என் தாயாருக்கு கொடுத்த வாக்கை மீறமாட்டேன். அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன். அதனால்தான் உண்மையை கூறினேன், என்று பதில் அளித்தான். இதைக் கேட்ட கொள்ளையர்கள் விம்மி விம்மி அழுதனர். உனது தாயாரின் அறிவுரைக்கு இவ்வளவு மதிப்பளிக்கிறாயே ! ஆனால் நாங்களோ, பல ஆண்டுகளாக எமது பெற்றோருக்கும், எம்மை படைத்தவனுக்கும் துரோகம் இழைத்துவிட்டோம். இன்று முதல் நீர்தான் எமது தலைவர் என்று கொள்ளையர்கள் கூறினர். கொள்ளையடிப்பதை அன்று முதல் விட்டொழித்து திருந்தி வாழ்ந்தனர். ஷேக் அப்துல் காதர் அல்- ஜிலானி என்ற ஒப்பற்ற துறவி பிறந்ததையும் உலகம் கண்டது. ஒரு தாய் தனது குழந்தைக்கு உண்மையைப் பற்றி சொன்ன செய்தியில் துறவி உருவானார். இத்தருணத்தில் திருவள்ளுவரின் வாக்கை நினைவுகூற விரும்புகிறேன்.

மனத்தோடு வாய்மை மொழியின் தவத்தோடு
தனஞ்செய் வாரின் தலை.

அருந்தவத்தையும், வாரி வழங்கும் கொடையையும்விட சிந்தனையிலும், செயலிலும் உண்மையோடு இருப்பது அதிக சக்தி வாய்ந்தது என்பதே இக்குறளின் பொருளாகும்.

ஆசிரியரின் தாக்கம்: எனது வாழ்வின் குறிக்கோள்:

எனது ஆரம்ப பள்ளி ஆசிரியர் திரு. சுப்பிரமணிய ஐயரைப் பற்றி பல முறை உங்களிடம் கூறியிருக்கிறேன். அவர் சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல, தனது மாணவர்களிடம் அவர்களின் எதிர்காலம் பற்றிய தொலைதூர பார்வையையும் உருவாக்கியவர். உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறலாம். ஒரு முறை பறவைகள் பறக்கும் விதம் பற்றி ஆசிரியர் எங்களுக்கு விளக்கினார். எங்களுக்கு புரிந்ததா என்று வினவினார். நாங்கள் விழிப்பதைப் பார்த்து, எங்களையெல்லாம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பறவைகள் பறப்பதை காண்பித்து, பறக்கும் நுட்பத்தை விளக்கினார். எல்லாவற்றையும்விட அவர் விளக்கிச் சொன்ன விதம் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. என் வாழ்க்கையின் குறிக்கோள் உருவாகியது. அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் ஓர் உன்னதமான மாதிரியாக உள்ளார்.

இதுவரை வெளிப்படைத் தன்மையின் அவசியம், உத்வேகம் அளித்த பரிசுடன் தொடர்புடைய பிரச்சனைகள், தாய் அளித்த உண்மைத் தத்துவம், மாணவர்களுக்கு ஆசிரியர் தந்த தொலைநோக்கு பார்வை போன்ற பல விசயங்களை விவாதித்தேன். இனி வளர்ச்சி அரசியýன் முக்கியத்துவம் குறித்து பேசப் போகிறேன்.

அரசியல் = அரசியலான அரசியல் + வளர்ச்சி அரசியல்:

உலகிலேயே பெரிய நாடாளுமன்ற ஜனநாயகம் இந்தியாவுடையது என்பதில் நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம். இது பலமதங்கள், பல மொழிகள் மற்றும் பல கலாச்சாரங்கள் இணைந்தது. இது நமது நாட்டுக்கு மட்டுமல்லாமல், நம் ஒவ்வொருவருக்கும் தன்மதிப்பு அளிக்கக்கூடியது. 56 ஆண்டுகளாக ஜனநாயக முறையில் பூத்துக்குலுங்கும் நமது குடியரசைப் பார்த்து மற்ற நாடுகளும் பொறாமைப் படுகின்றன. இந்திய வாக்காளர்களின் மதிநுட்பத்தையும், பக்குவத்தையும் உலகமே வியப்புடன் பார்க்கிறது. மக்கள் இறையான்மை மிக்கவர்கள், அதிகாரம் அவர்களிடமிருந்துதான் வருகிறது என்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப இந்திய வாக்காளர்கள் தமது மனசாட்சிகேற்ப உற்சாகமாக வாக்களித்து தம்மை நிரூபித்து வருகிறார்கள். வளர்ந்த இந்தியாவில் வாழ்வதற்கு மக்களுக்கு உரிமையும், உத்வேகமும் இருக்கிறது. எனவே வளர்ச்சி அரசியலை நோக்கி நம்மை சீரமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அரசியýல் இரண்டு பரிமாணங்கள் உள்ளன. முதலாவது அரசியலான அரசியல். மற்றது வளர்ச்சி அரசியல். தேர்தல் தருணங்களில் முதலாவது தேவைப்படுகிறது. தேர்தல் முடிந்த உடனேயே, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுக்குறிக்கோளுடன் வளர்ச்சி அரசியலை நோக்கி நடைபோட வேண்டும். இதை செயலாக மொழிபெயர்க்கும் போது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 26 கோடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும், கல்லாமை மற்றும் வேலைவாய்ப்பில்லாத நிலையை ஒழித்துக் கட்டும் உயர்ந்த நோக்கங்களுடன் அனைத்து கட்சிகளும் பாடுபட வேண்டும். நமது நாட்டில் வளர்ச்சி அரசியல் நிலவும் சூழýல் ஒவ்வொரு கட்சியும் தனது வளர்ச்சிக் குறிக்கோளில் கவனம் செலுத்தி ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் நிலை உருவாக வேண்டுமென்று விரும்புகிறேன்.

நமது நாட்டில் 25 வயதுக்கு கீழ் உள்ள 54 கோடி இளைஞர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணியை பின்பற்றி சிறந்த தலைவர்களாக உருவாகும் நிலை வரவேண்டும். அரசியýலும், வளர்ச்சி இலக்குகளிலும் நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். சுவாமி விவேகாநந்தரின் பிரபலமான கூற்றை நினைவுகூற விரும்புகிறேன் - சமூகமோ அரசியலோ அனைத்து முறைகளுக்கும் அடிப்படை மனிதனின் நல்ல தன்மையே. ஒரு நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றி விடுவதாலேயே எந்த நாடும் சிறந்ததாக உயர முடியாது. அந்த நாட்டில் உள்ள மனிதர்கள் சிறந்தவர்களாகவும், நல்லவர்களாகவும் இருப்பது முக்கியம்.

தொலைந்த ஆட்டின் கதை:

அருமை நண்பர்களே, உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஏசு கிறிஸ்து சொன்ன தொலைந்த ஆடு என்ற பைபிள் கதை என் நினைவுக்கு வருகிறது. உங்களிடம் உள்ள 100 ஆடுகளில் ஒன்று தொலைந்து போனால் என்ன செய்வீர்கள்? மீதமுள்ள 99 ஆடுகளையும் வயýலேயே விட்டு விட்டு, தொலைந்த அந்த ஒன்றை தேடிச் செல்வீர்கள்தானே. அந்த ஆடு கிடைக்கும் வரை தேடிக்கொண்டே இருப்பீர்கள். அந்த ஆடு கிடைத்து விட்டால் அளவற்ற மகிழ்ச்சியுடன் அதை வாரி அணைத்து தோளில் தூக்கி வைத்துக்கொண்டு வீடு திரும்புவீர்கள். பிறகு உங்களது நண்பர்களையும், பக்கத்து வீட்டுக்காரர்களையும் அழைத்து என் ஆடு கிடைத்து விட்டது, இதை கொண்டாட எல்லோரும் என் வீட்டுக்கு விருந்து உண்ண வாருங்கள் என்று அழைப்பீர்கள்.

ஆடு மேய்ப்பவனுக்கு தொலைந்து போன ஆடு மிக முக்கியம். இந்த கதை நமது நாட்டில் உள்ள குடிமகனுக்கும் ஒரு செய்தியை சொல்கிறது. உங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஒரு வீடு விளக்கில்லாமல் இருண்டிருக்கலாம். தயது செய்து அந்த வீட்டை ஒளியேற்ற உதவுங்கள். ஒரு வகுப்பறையில் எராளமான சிறந்த மாணவர்கள் இருக்கலாம். ஆனால் சிலருக்கு அன்புடன் கல்வியை ஆசிரியர்கள் சொல்ýத்தர வேண்டியிருந்தது. இத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். எனது நாட்டில் உள்ள தலைவர்களே, நீங்கள் ஏராளமான மக்களை சந்தித்து அவர்களுக்கு உதவியிருக்கலாம். ஆனால் உடனடியாக உதவி தேவைப்படுவர்களை கண்டறிந்து அவர்களை முக்கிய நீரோட்டத்திற்கு நீங்கள் அழைத்து வர வேண்டும். பொது நிர்வாகத்தில் இருப்பவர்கள், கடைசி மனிதனின் தேவையறிந்து, அவனுக்கு அல்லது அவளுக்கு பிரியமுடன் பணி செய்ய வேண்டும். அதை போலவே நீதி மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளும், பல்வேறு தடைகளைத் தாண்டிவந்து, உங்களை காண இயலாத கடைக்கோடி மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும். மீன்வளத்துறையாகட்டும், வேளாண்மையாகட்டும், நுண்கலையாகட்டும் அல்லது கிராமப்புற மக்களின் சிறு சாதனையாகட்டும், தேசிய வளர்ச்சியில் கூட்டாளியாக இருக்கும் ஊடகத்துறை மக்களின் வெற்றியை கொண்டாட வேண்டும். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் பரந்துபட்ட எதார்த்தத்தில் கிராமிய நிஜங்களின் சிறு உலகம் வசித்துக்கொண்டிருக்கிறது. ஊடகங்கள் இதை உணர வேண்டும்.

இதைப் போல பல எடுத்துக்காட்டுகளை சொல்லலாம். அருமை குடிமக்களே நாம் எல்லோரும் இவ்வாறு செய்தால் இறைவன் நம்போடு இருப்பார் என்பது நிச்சயம். நாடும் வளம் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கும், மகாத்மா காந்திக்கு அவருடைய அன்னையார் அளித்த அறிவுரை இதற்கு சான்று பகர்கிறது. காந்தியடிகள் கூறுகிறார், மகனே உன்னுடைய வாழ்நாளில் யாராவது ஒருவருடைய உயிரை காப்பாற்ற அல்லது அவரது வாழ்வு மேம்பட உதவ முடியுமானால் உன்னுடைய வாழ்க்கையும், நீ ஒரு மனிதனாக பிறந்த நோக்கமும் வெற்றி பெறும். இறைவனுடைய அருள் உங்களுக்கு கிட்டும்.

முடிவுரை:

தவறே இல்லாமை தெய்வீகமாகும். நாம் தெய்வீகமானவர்கள் அல்ல. தவறு செய்ய கூடியவர்கள். பிழை செய்வது மனித இயல்பு. இந்த உண்மையை உணர்ந்து தவறு நேரும் போது நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே தெய்வீகத்தின் விருப்பமாகும். உள்நோக்க ஏதுமின்றி இழைக்கப்பட்ட தவறுகள் பற்றியே வருந்திக்கொண்டிராமல், நடுநிலை பிறழாத வெற்றிக்கான நமது வேட்கையே, நமது பாதையில் நேரும் பிழைகளை சரி செய்ய நம்மைத் தூண்ட வேண்டும். அனைத்து மக்களின் ஒழுங்கு நிறைந்த செயல்களே தற்போதைய அதி முக்கியத் தேவையாகும். இதனால் விழிப்புணர்வு பெற்ற குடிமக்கள் உருவாவார்கள். எந்த நாடும் அதன் மக்களை போன்றே நல்லதாகும். அவர்களுடைய குண நலன்களை நாடு பிரதிபýக்கும். இவை நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறதா அல்லது பின் தங்கியுள்ளதா என்பதை தீர்மானிப்பதற்கான முக்கிய காரணிகளாகும். எனவே என்றும் நிலைத்திருக்கும் சில மதிப்பு முறைகளை நாம் குடிமக்களிடையே உருவாக்க வேண்டும். சில ஒழுங்குமுறைகளை அவர்களுக்கு ஊட்ட வேண்டும். துவக்க நிலை முதற்கொண்டு கல்வித் திட்டத்தில் இதற்கு முழு கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒழுக்கத்தின் சிறப்பை வýயுறுத்த, அரசு மற்றும் தனியார்துறை கல்வி நிறுவனங்களிலும், மேல்நிலைப்பள்ளி அல்லது பட்டபடிப்பு நிலையில் அனைத்து இளைஞர்களுக்கும் 18 மாதம் கட்டாயமாக தேசிய மாணவர்படையில் பயிற்சி அளிப்பது அவசியம். இதனால் ஒழுக்கம் நிறைந்த அரசியல், வியாபாரம், நிதித்துறை, விளையாட்டுக்கள், ஆட்சிமுறை மற்றும் அறிவியல் தேடல்களுக்கு வழியுண்டாகும். நாம் எல்லோரும் வாய்மை, நேர்மை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை நமது அன்றாட வாழ்விலும் கடைபிடிக்க வேண்டும். இது நமது அரசியலை மேன்மைநிலைக்கு உயர்த்தும். நாம் அனைவரும் பயன் பெறும் வகையில் மொத்தமாக நாமே நாட்டுக்காற்ற வேண்டிய பணி குறித்த ஒரு நேர்முக உணர்வை ஏற்படுத்த வேண்டும். நமது முன்னோர் மேற்கொண்ட சேவை மூலமாகவும், விட்டுச் சென்ற பணிகள் மூலமும், நாம் பெரிதும் பயனடைந்திருக்கிறோம், நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு இத்தகைய ஒரு கடப்பாடுக்கு நமக்கு உரிமையும் பொறுப்பும் உண்டு. இந்நாட்டின் நிலமும், நீரும், ஆகாயமும் இதற்கு சாட்சிகளாகும்.

நேர்மையான உழைப்பே நம்மை வழிநடத்திச் செல்லும் ஒளியாகும், கடினமாக உழைத்தால் நாம் எல்லோரும் வளமடையலாம். சிறந்த எண்ணங்களைத் தாங்கி செயல்பாடுகளில் உயர்வோம். நேர்மையான வழிமுறைகள் நமக்கு துணையாகலாம். இறையருளால் நாடு மென்மேலும் வளம் பெறும்.

எனதருமை குடிமக்களே, மகிழ்ச்சியான குடியரசு நாளை உங்களுக்கு மீண்டும் வாழ்த்துகிறேன். இறைவன் உங்களுக்கு அருள்வாராக.

ஜெய்ஹிந்த் !

நன்றி: சிபி

1 comment:

பால் ரவிசங்கர் said...

1. மறுமொழி மட்டுறுத்தல் வசதி செய்யப்பட்டுள்ளதால் , உங்களின் கருத்துக்கள் அனுமதி பெற்ற பின்னரே வெளியிடப்படும்.

2. பிளாக்கர் கணக்கில்லாதவருக்கும் அனுமதி இல்லை.

தயவு செய்து பொருத்தருளவும்.