Friday, July 01, 2005

கேரளா - திறமூலத்திற்கு வழிகாட்டுகிறது

நமது அண்டைமாநிலமான கேரளா எல்லா மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக ஒரு திட்டத்தை(IT@school) ஏற்படுத்தி அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளனர்.கேரளாவில் 8,9 மற்றும் 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கணிணி அறிவியலும் ஒரு கட்டாயப்பாடமாக இடம் பெறுகிறது.அதில் விண்டோஸ் மற்றும் திறமூல லினக்ஸ், ஆபிஸ் மற்றும் திறமூல ஒபன்ஆபிஸ் பற்றிய பாடத்திட்டங்கள் தற்போது உள்ளன.

கேரளா முழுவதும் சுமார் 2600 மேனிலைப் பள்ளிகள் உள்ளன. இவைகள் அனைத்திற்கும் மைக்ரோஸாப்ட் விண்டோஸ் , ஆபிஸ் போன்ற மூடப்பட்ட வணிக மென்பொருள் வாங்கினால் ஆகும் செலவு சுமார் 100 கோடிகள். மென்பொருள் உரிமம் மட்டுமே. ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? இந்த ஆண்டு 8ம் வகுப்பு கணிணி அறிவியல் முழுவதும் திறமுல செயலிகளுக்கு மாறுகிறது, அடுத்த ஆண்டு 9 ம்வகுப்பு அதற்கு அடுத்த ஆண்டு 10ம் வகுப்பு. அதனால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 8,9,10ம் வகுப்புகள் முழுவதும் திறமூலம் சார்ந்த படிப்பே.

எனவே வணிக மென்பொருள் வாங்கினால் ஆகும் அந்த 100 கோடியை திறமூல முறையினில் மிச்சம் செய்து, அதை கணிணி ஆசிரியர்களுக்குத் திறமூலப் பயிற்சி மற்றும் பொதுக்கட்டமைப்பு முன்னேற்றம் என பயனுள்ள வழியில் செலவிடுகின்றனர்.Model Engineering College, எர்ணாகுளத்தில் மே 16 முதல் ஜூன் 4 வரை 200 பேருக்குத் திறமூலமென்பொருள்களில் பயிற்சி அளிக்கப்பட்டு விட்டது. இவர்கள் ஒவ்பொரு மாவட்டத்திலும் உள்ள 4,000 பேர்களுக்குப் பயிற்சி அளிப்பர்.

ஏற்கனவே கோவாமாநில அரசு உபயோகமற்ற பழைய கணிணிகளில் எப்படித் திறமூலமென்பொருள்களால் அதை உபயோகிக்க முடியும் என்று காட்டியுள்ளனர்.கேரளா அரசின் கல்வித்துறை மே 28 முதல் 30 வரை கொச்சி டெக்னோபார்க்கில் பிரேசில், வெனிசுலா, இத்தாலி நாட்டினரோடு ஒரு கலந்தாய்வுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். மற்றவர்கள் ஏற்கனவே பள்ளிகளில் திறம்மூல மென்பொருளை பயன்படுத்துவதில் அனுபவம் உள்ளவர்கள்.

கேரளாவில் 10ம்வகுப்பு மாணவன் திறமூல மென்பொருள்களை பயன்படுத்துவதில் முண்ணணியில் உள்ளனர். ஆனால் நாம் இன்னும் யோசித்துக்கொண்டே (தூங்கிக்கொண்டு) இருக்கிறோம்........

அவர்கள் ஏற்படுத்தியுள்ள பாடநூலைப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

இந்தத் தளத்தில் மலையாள, தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடத்திட்ட 10ம் வகுப்பு நூல்கள் உள்ளன.தமிழ்வழிப்பாடத்திட்டத்தில் கணிணி மொழிபெயர்ப்பைக் கவனியுங்கள். மிகவும் அருமை.

லினக்ஸ், ஒபன் ஆபிஸ் மற்றும் உலாவிகள் தமிழிலேயே நம்மிடம் உள்ளது. கிராமப்புற மாணவர்கள் இதைப் படிப்பதிலும் எந்தப்பிரச்சனையும் இருக்கப் போவது இல்லை. தமிழ்நாட்டில் எப்போது இப்படிப்பட்ட நல்ல திட்டங்களை அமல் செய்யப் போகிறார்கள்?

இவைகள் அமல்செய்யப்பட வேண்டும். அதுதான் திறமூலங்களுக்காக சுயநலமில்லாமல் பாடுபடுபவர்களுக்கு நாம் செய்யும் நன்றி.

இலவசமாக மீன்கள்(புத்தகங்கள்) கொடுப்பதைவிட மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்பது எவ்வளவோ மேல்..

மேலும் விபரங்களுக்குப் பாருங்கள்
http://www.hindu.com/2005/05/24/stories/2005052410940400.htm

No comments: