Wednesday, July 13, 2005

ஆட்டோகிராப் படத்துக்கு 3 தேசிய விருதுகள்

2004 ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.இதில் ஆட்டோகிராப், படத்துக்கு 3 விருதுகள் கிடைத்து உள்ளது.

விருது பெற்றவர்களின் விபரங்கள்

சிறந்த நடிகராக சாயிப் அலிகான் தேர்வு செய்யப்பட்டார் (படம்: ஹம்தும்)
சிறந்த நடிகையாக கன்னட நடிகை தாரா (படம்:ஹசீனா)
சிறந்த படமாக இந்தி படம் பேஜ்3
சிறந்த பாப்புலர் படமாக தமிழ் படம் ஆட்டோகிராப் மற்றும் இந்தி படம் வீர் சாரா தேர்வு பெற்றது
சிறந்த பின்னணி பாடகர் உதித் நாராயணன்(படம்:யாக் தாரா ஓக் தாரா)
சிறந்த பின்னணி பாடகி சித்ரா சுப்பிரமணியம்(படம்:ஆட்டோகிராப்)
சிறந்த இயக்குனராக புத்தாவ் தேவ் தாஸ் குப்தா (பெங்காலி படம் ஸ்வப்னர் தின்)
சிறந்த குழந்த நட்சத்திரம் சோட்டா சிபய்
சிறந்த பாடலாசிரியராக தமிழ்நாட்டை சேர்ந்த பா. விஜய் தேர்வு பெற்றார்(படம்:ஆட்டோகிராப்)
நர்கிஸ் தத் விருது பெற்ற படம்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

இதில்,

சிறந்த பாப்புலர் படமாக தமிழ் படம் ஆட்டோகிராப் மற்றும் இந்தி படம் வீர் சாரா தேர்வு பெற்றது
சிறந்த பின்னணி பாடகி சித்ரா சுப்பிரமணியம்(படம்:ஆட்டோகிராப்)
சிறந்த பாடலாசிரியராக தமிழ்நாட்டை சேர்ந்த பா. விஜய் தேர்வு பெற்றார்(படம்:ஆட்டோகிராப்)

வழக்கம்போல தமிழகம் 3 விருதினைப் பெற்று சாதித்துள்ளது.ஒவ்பொருவருடமும் தேசியதிரைப்பட விருதுகளின் கதவுகள் தமிழகத்துக்காகத் தமிழுக்காகத் திறக்கப்படுவது என்னை மிகவும் சந்தோசத்தில் ஆழ்த்துகிறது.

எல்லோரும் எதிர்பார்த்ததுபோல பா.விஜயின் ஒவ்வொரு பூக்களுமே.. பாடலுக்கு விருது கிடைத்துள்ளது.

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் அடைந்தால் நீ
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!

மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!

பாடல் உதவி : ( சந்திரவதனா அக்கா அவர்கள் )

இந்தப் பாடல் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதாக உள்ளதாக கூறி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தன்னுடைய பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் முதல் தாள் பாடத் திட்டத்தில் செய்யுள் திரட்டு என்ற தலைப்பிலான பிரிவில் இடம்பெற்றுள்ள 50 கவிதைகளில் ஒவ்வொரு பூக்களும் பாட்டும் இடம் பெற்றுள்ளது.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 84 கல்லூரிகளில் தமிழ் முதல் தாளில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது. இப் பாடலை பாடத் திட்டத்தில் சேர்க்க பல்கலைக்கழக செனட் மற்றும் சிண்டிகேட்டும் அனுமதி அளித்துவிட்டது.அதே போல தமிழகத்தின் பல பள்ளிகளில் காலை நேரத்தில் நடக்கும் பிரேயர் செஷனில் இந்தப் பாடலையே மாணவ, மாணவிகளை பாட வைத்து வருகின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.

மேலும் விபரங்களிக்குப் பார்க்க
http://www.hinduonnet.com/thehindu/holnus/009200507131713.htm

பாடல்கள் கேட்க
http://www.raaga.com/channels/tamil/movie/T0000555.html

No comments: